Sunday, January 6, 2019

புதிய அரசியல் அமைப்பு, விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ராஜித்த கூறுகிறார்.

புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, புதிய அரசியல் அமைப்பை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை புதிய அரசியல் அமைப்புக்கு தாம் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்களின் வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கத்துடனேயே புதிய அரசியல் அமைப்பை, அரசாங்க தரப்பினர் கொண்டு வருவதாக, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு தீமையே வரும் என கூறிய பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பிற்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com