Sunday, January 6, 2019

மகனுக்காக களத்தில் இறங்கினார் சாலி மகேந்திரன் - நடப்பது என்ன?

எனது மகனை எவ்வாறு குற்றவாளியாக அடையாளப்படுத்தினீர்கள்? என்று கேள்வி எழுப்பி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் தந்தையான சாலி மகேந்திரன் இன்று ''தி ஐலண்ட் '' பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் தேடப்பட்டுவரும் பிரதான குற்றவாளியான அர்ஜுன் மஹேந்திரக்கு, சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டில் கைதான அர்ஜுன் அலோசிஜஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கடந்த ஒருவருட காலமாக விளக்கமறியலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், அண்மையில் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில் அர்ஜுன் மகேந்தின் தேடப்படும் குற்றவாளியாக உள்ளநிலையில் அவரது தந்தையாரான சாலி மகேந்திரன் ''தி ஐலண்ட்'' என்ற ஆங்கில பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்,எனது மகனை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதற்கு இருக்கும் சாட்சியங்கள் என்ன ?அர்ஜூன் மகேந்திரனுக்கு தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகளில் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் பிட்டிபன குழு உயர்நீதிமன்றம் மற்றும் கோப் குழுவில், அர்ஜூன் மகேந்திரன் எந்த குற்றத்தையும் செய்ததாக குறிப்பிடப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறிகள் கெடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆனைக்குழு நியமிக்கப்பட்டது. அர்ஜூன் மகேந்திரன் மீண்டும் நாட்டுக்கு திரும்பினால் அது பாரிய விடயமாக மாறும் என்று தெரிவித்த அவர், சுதந்திர தினத்தன்று அர்ஜூன அலோசியஸை கைது செய்ததன் மூலம் இதன் அரசியல் தேவை வௌிப்பட்டதாக சாலி மகேந்திரன் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அர்ஜூன் மகேந்திரனை நான்கு வருடங்களுக்கு அரசியல் கட்சி ஒன்றுக்கு ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு. அரசியல்வாதிகள் தமது ஊடக நண்பர்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் தந்தையான சாலி மகேந்திரன் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com