Sunday, January 6, 2019

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கபட்டவர் யார்?

கிழக்கு மாகாண ஆளுநனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தகுதியானவரை உடனடியாக பரிந்துரைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இந்த கோரிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பாட்டு வந்த எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநனராக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தில் இருந்து விலகியநிலையில், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் தொடர்பான கேள்வி எழுந்தது.

இந்த நிலையிலேயே இவரது வெற்றிடத்திற்கு தகுதியானவரைப் பரிந்துரைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது.இது தொடர்பிலான கடிதத்தை நாளைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இவரது பதவி விலகலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளரினால் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியானவர் பெயரிடப்பட்டதுடன், அது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com