Thursday, January 3, 2019

ஜெனிவாவில் மங்கள மேற்கொண்ட காட்டிக்கொடுப்பை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சஜித் பிறேமதாஸ

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவோ அல்லது எமது நாட்டிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் தலைவர்களில் ஒருவரான சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.

உலக இலங்கையர் பேரவையைச் சேர்ந்ததோர் சஜித் பிறேமதாஸ நேற்று முன்னதினம் 1 திகதி சந்தித்துப் பேசியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில், பேரவையின் பிரதானிகளில் ஒருவரான பயஸ் தர்மதாஸ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிறேமதாஸவின் மேற்படி கூற்று தொடர்பில் தமது திருப்தியை வெளியிட்டுள்ளார்.

சஜித்தின் மேற்படி திடமான கூற்றானது மங்கள ஜெனிவாவில் மேற்கொண்ட விடயத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com