Sunday, January 20, 2019

சகல மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்செய்கையை, படைப்புழுக்கள் ஆக்கிரமித்து விட்டன. - விவசாய திணைக்களம்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள சோள பயிர்செய்கையை, படைப்புழுக்கள் ஆக்கிரமித்துள்ளதாக, விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

81 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் தற்போது 48 ஹெக்டேயர் நிலப்பரப்பில் படைப்புழுக்கள் சூழ்ந்துள்ளதாக, விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த படைப்புழுக்களிடம் இருந்து சோளப்பயிரை காக்க எம்மோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுர விஜேதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல் தடவையாக அனுராதபுரம் மாவட்டத்திலேயே, இந்த படைப்புழுக்கள் கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதமளவில் ஆக்கிரமித்திருத்ததாக குறிப்பிட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுர விஜேதுங்க, பின்னர் மட்டக்களப்பு,பொலன்னறுவை, மொனராகலை முதலான மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன் இந்த படைப்புழுக்களின் தாக்கம் தற்போது நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாக அவர்  கூறியுள்ளார்.

இதேவேளை சொல்பயிர்செய்கையை பாதித்துள்ள இந்த படைப்புழுக்கள், தற்போது குரக்கன், மரக்கறி உள்ளிட்ட 100 பரவிச் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து பயிற்செய்கையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என, விவசாய திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com