Sunday, January 20, 2019

அறுவரை காவு கொண்டது, கோர விபத்து! - வென்னப்புவ காவல்துறையினர்.

இன்று அதிகாலை 03.15 அளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில், அறுவர் உயிரிழந்துள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வென்னப்புவ – நைனாமடம பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர், சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிட்டனர்.

கார் ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரில், இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்,  வென்னப்புவ காவல் துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com