Sunday, January 20, 2019

யாழ் கடையொன்றுக்குள் புகுந்த கும்பல், மூர்க்கத்தனமாக தாக்குதல் - யாழில் பதற்றம்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றினுள் நுழைந்த 20 பேர் அடங்கிய கும்பலொன்று அங்கு மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் மேற்கொண்ட தரப்பினர் அந்த நகை கடையில், நகை ஒன்றினை செய்வதற்கு பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தபடி நகையை செய்தாலும், அதன் நிறை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடை உரிமையாளர், அதற்கு தகுந்தாற் போல் பணம் அறவிட்டுள்ளார்.

இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் நகை கடை உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் வந்த போதிலும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களை காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து விரைந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பினர்களின் கார் ஒன்று, அந்த பகுதியில் தரித்து நிற்பதாக  தெரிய  வருகிறது.

இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com