கோப் குழுவின் அமர்வுகளில், இனி ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளலாம்.
கோப் (COPE) குழுவின் அமர்வுகளில் இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்க்ளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிலையியல் கட்டளையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இற்கமைய விரைவில் கோப் குழுவால் முன்னெடுக்கப்படும் அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றதின் அனைத்து குழுக்களின் அமர்வுகளிலும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில், தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment