Monday, January 28, 2019

நாட்டுக்குள் நாய் வந்தால் விரட்டியடிக்கலாம், புலி வந்தால், நாம் தான் நாட்டை விட்டு ஓட வேண்டும் - உதய கம்மன்பில.

நாட்டுக்குள் நாய் வந்தால் விரட்டியடிக்கலாம். ஆனால் புலி வந்தால், நாம் தான் நாட்டை விட்டு ஓட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, இலங்கைக்குள் அமெரிக்க முகாமொன்றை ஸ்தாபிக்க, அமெரிக்கத் தூதரகத்தால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலகத்தின் ஊடாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமது சொந்த நாட்டில் அமெரிக்காவின் முகாமை அமைக்க அனுமதியளித்து, அதனால் ஏற்பட்ட விளைவை நாம் பனாமா சம்பவத்தின் ஊடாகவே நன்றாக உணர்ந்து விட்டோம் .

அமெரிக்காவின் இராணுவம், இலங்கையில் முகாமிட்டால் பனாமாவில் ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். எமது வீட்டுக்குள் நாயொன்று நுழைந்தால் இலகுவில் விரட்டி விடலாம். ஆனால், புலியொன்று உட்புகுந்தால் நாம் தான் வீட்டை விட்டு ஓட வேண்டும்.

இந்த விடயத்தில் அமெரிக்கா என்பது புலியைப் போன்றது என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதனை அரசாங்கம் ஒரு எச்சரிக்கையாகக் கருத வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com