வாகன சாரதிகளுக்கு, திடீர் எச்சரிக்கை - அர்ஜுன ரணதுங்க.
வாகனங்களை செலுத்தும் போது, பாரிய தவறுகள் இடம்பெறுமானால் அதற்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அதிகரிப்பு எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே,
போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு வாகனங்களை செலுத்தும் சாரதிகளின், சாரதி அனுமதி பத்திரமும் பறிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இந்த தீர்மானம் குறித்து விரைவில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி சட்டமாக்குவதற்கான ஏற்பாடுகளை தாம் முன்னெடுத்து வருவதாக அர்ஜுன ரணத்துனாக் கூறியுள்ளார்.
அண்மைக் காலமாக வீதியோரங்களில் ஏற்படும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் தாம் முன்னெடுக்கவுள்ள இந்த தீர்மானத்தின் மூலம் வாக விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும், போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment