சேனா படைப்புழுவை இல்லாதொழிக்க, நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம்.
நாட்டின் சோளப்பயிர்ச்செய்கையைத் தாக்கியுள்ள சேனா பயிற்செய்கையின் முலம், விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த படைப்புழுவின் தாக்கத்தில் இருந்து பயிர்களை காப்பாற்ற தற்போது விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, பீடைக்கொல்லி ஒழிப்பு செயல்திட்ட பதிவாளர் சுமித் குறிப்பிட்டுள்ளார்.
சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்காக விவசாய அமைச்சு 5 இரசாயன பொருட்களை பரிந்துரை செய்துள்ளது. அந்த பொருட்களை தற்போது நாடு முழுவதும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
இந்த 5 இரசாயன பொருட்களையும் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக, பீடைக்கொல்லி ஒழிப்பு செயல்திட்ட பதிவாளர் சுமித் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மேற்படி ரசாயன பொருட்களை பயன்படுத்தும் விதம் தொடர்பான கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்குவதுடன், அது குறித்து விசேட தெளிவுபடுத்தலும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், சேனா படைப்புழுவால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment