இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இரண்டு முக்கிய விடயங்கள்
இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
இந்தச் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா முன்வைக்கவுள்ளார். அத்துடன் இன்றைய நாளுமன்ற அமர்வில், பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி, சுற்றுலா, நிதி மற்றும் வெகுஜன ஊடகம், வௌிவிவகாரம், சுதேச மருத்துவம் உள்ளிட்ட 31 அமைச்சுக்களுக்கான ஆலோசனை தெரிவுக் குழுக்களுக்கான அனுமதி பெறப்படவுள்ளது.
0 comments :
Post a Comment