தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை, ரணிலும் சுமந்திரனும் இணைந்து ஏமாற்றுகின்றார்கள். மஹிந்தர்.
புதிய அரசியல் யாப்பு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரனும் இணைந்து நாட்டின் மூவின மக்களையும் ஏமாற்ற முயல்வதாக எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (22) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நடந்த மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் :
நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை. ஆனால் எந்த மாதிரியான அரசியலமைப்பு தேவையென்பதிலேயே பிரச்சனையுள்ளது. தற்போதைய அரசியலமைப்பில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனும் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் கொண்டுவரப்படவுள்ளது அரசியலமைப்பு இல்லையென்கிறார் பிரதமர். மற்றவர்கள் சொல்கிறார்கள் இது வரைபு அல்ல என்கிறார்கள். அப்படியானால் இது என்ன? மறுபக்கம், பௌத்தம் அதன் அந்தஸ்த்தை இழந்து விடும் என்று எச்சரிக்கிறார்கள்.
இது ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சுமந்திரனிற்கும் இடையிலான உடன்படிக்கை. இவர்கள் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறார்கள். இதை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு அரசியலமைப்பு அவசியம்தான். ஆனால் அது எந்தவிதமானது என்பதிலேயே பிரச்சனை உள்ளது' என்றார் எதிர்கட்சி த் தலைவர்.
0 comments :
Post a Comment