Saturday, January 5, 2019

மோசடியாக நிவாரணம் சேகரித்த ஆசாமியை மடக்கிப் பிடித்த மக்கள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சேகரிப்பதாக மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தென்மராட்சி - சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பெயரைக் குறிப்பிட்டு பல கிராமங்களில் பணம் வசூலித்த நபர் ஒருவரே இவ்வாறு மாட்டிக்கொண்டுள்ளார்.

இன்று காலை எழுதுமட்டுவாழ் வடக்கு கிராம மக்களிடம் பண வசூலிப்பில் ஈடுபட்ட குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட பிரதேச வாசி ஒருவர் கிராமசேவகருக்கு தகவல் வழங்கியைதை தொடர்ந்தே இவ் முறியடிப்பு இடம்பெற்றுள்ளது.

கிராமசேவகர் பிரதேச இளைஞர்களை இணைந்து நபரை விரட்டிப்பிடித்ததுடன் பொலிஸாரிடம் மோசடிப் பேர்வழியை கையளித்துள்ளார்.

இவ்வாறு, மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என்பது அவரது அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com