Saturday, January 5, 2019

இலங்கை குறித்து, புதிய பிரேரணையுடன், 3 அறிக்கைகளும், 4 விவாதங்களும் இடம்பெறும்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின் போது, புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதுடன் , 3 அறிக்கைகளும், 4 விவாதங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்குகொள்வதற்காக, இலங்கையில் இருந்து அரசாங்க தரப்பின் உயர் மட்ட அதிகாரிகளுடன், வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலான சில பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பிரதிநித்துவப்படுத்தும் இவர்கள், ஐக்கிய நாடுகளின் வளாகத்தில் இடம்பெறும் கூட்டங்களிலிலும் பங்கு கொள்வார்கள் என்று அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த கூட்டத்தொடரின் போது கடந்த 4 வருடங்களில், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நல்லிணக்க செயல்பாடுகள், பொறுப்புக்கூறல், உள்ளிட்ட விடயங்கள் குறித்த அறிக்கையொன்றும்
அரசாங்க தரப்பினரால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தொடரின் போது, சர்வதேச நாடுகள் பல, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என, வலியுறுத்தல் விடுக்கவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com