Saturday, January 5, 2019

எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயம் இரா. சம்மந்தனுக்கே - வேதாளம் மீண்டும் முருங்கையில்.

சபாநாயக்கர் கரு ஜெயசூரிய அறிவிக்கும் வரையில், எதிர்க்கட்சி தலைவராக இரா. சம்மந்தரே இருப்பார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எந்த காரணத்திற்காகவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஸவிற்கு விட்டுக்கொடுக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பாது என்று கூறிய சுமந்திரன், மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானம் சட்ட ரீதியாக இடம்பெற வேண்டும் என்பதே, தமது நோக்கமென எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சபாநாயகரின் அறிவிப்பு வரும் வரையில் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயம் இரா.சம்மந்தனிடமே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யார் எதிர்கட்சி தலைவர் என்ற கேள்விக்கான விடை வெகு விரைவில் கிடைக்கும் என எம்.ஏ. சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே இருப்பதாக கூறிய சுமந்திரன், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனே எனவும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com