Thursday, January 17, 2019

கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மக்களுக்கு, அவசர எச்சரிக்கை.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் டெங்கு நோய் அதிகளவில் பரவி வருவதாக தொற்று நோய்த் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை உடனடியாக பின்பற்றுமாறு அந்த பிரிவு போது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதம் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பல இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 13,060 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர கண்டி, மாத்தறை களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர், டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் டெங்கு நோய் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com