Thursday, January 17, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆளுங்கட்சியாக அங்கீகரிப்பீர்! கம்பன்பில சபாநாயகருக்கு கடிதம்.

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆளுங்கட்சியாக கருதி செயற்படுமாறு, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை பிவிதுரு ஹெல உறுமையவின் தலைவர் உதய கம்மன்பில அனுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லா விடயங்களிலும் அரசுக்கே ஆதரவளித்து வருவதாகவும், எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சி போல் அக்கட்சி செயல்படவில்லை என்றும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில, தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆளும் கட்சியாக, அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இனிவரும் காலங்களில் நாடாளுமன்றில் ஆசன இட ஒதுக்கீட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தாது ஆளுங்கட்சி வரிசையில் அமர்த்துமாறும், உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தை அடுத்து சபாநாயகரின் நிலைப்பாட்டை அறிய அரசியல் வட்டாரங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com