Thursday, January 17, 2019

குளவி கொட்டுக்கு இலக்கான 70 மாணவர்கள், வைத்தியசாலைகளில் அனுமதி.

குளவி கொட்டுக்கு இலக்கான 70 பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

பண்டாரவளை - எல்ல - பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்களே, இன்று முற்பகல்
இந்த அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

பல்லகெடுவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள மரத்திலிருந்த குளவி கூடொன்று கலைந்து, மாணவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் தெமோதர மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com