Saturday, January 26, 2019

கோட்டாவிற்கு எதிரான வழக்கில் இருவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

D .A ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணப் பணிக்காக 33 மில்லியன் ரூபா அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏழு பேருக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் சாட்சிகள் மூவருக்கு, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சாட்சியாளர்கள் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக மூவரடங்கிய நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com