Saturday, January 26, 2019

ஞாசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஐ.தே.க அமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. புத்தசாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் டி. அருன்காந்த உள்ளிட்டவர்கள் வெவ்வேறாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி இந்தக் கோரிக்கைகளை தயவுடன் நோக்கி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com