Sunday, January 27, 2019

அபிவிருத்தியை ஏற்படுத்த அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை - மஹிந்த ரஜபக்ச

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும் என்று நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது நாட்டை துண்டுகளாக உடைத்து காட்டிக் கொடுப்பதற்கு முற்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் அதற்கு எதிராக இருப்பதாக அவர் மேலும் கூறினார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்மையே தற்போதைய சூழலில் அரசியலமைப்பை தாக்கல் செய்ய முடியாமைக்கான காரணம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லையென கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் ஜப்பான் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் எதிர்கட்சி தலைவர் பதிலளித்துள்ளார்.

நாட்டின் சொத்துக்களை வைத்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வது எப்படிப் போனாலும், மக்களின் பசியைப் போக்குவதற்கே முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com