Tuesday, January 1, 2019

புதிய முறைப்பாட்டை பதிவு செய்தார் நாமல் குமார

நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிய முறைப்பாடு ஒன்றை, ஊழல் எதிர்ப்பு செயலணியின் பணிப்பாளர் நாமல் குமார நிதிக்குற்ற விசாரணனைப் பிரிவில் பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு, விவசாயிகளுக்கு உரம் வழங்கும்போது தவறான முறையில் நிதி கையாண்டுள்ளமை தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர் ஊழல் எதிர்ப்பு செயலணியின் பணிப்பாளர் நாமல் குமார, ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பிலான கொலை சதித்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com