Tuesday, January 1, 2019

யாழ் நீதிமன்ற நீதிவானாக பதவியேற்றார் அந்தோனி சாமி பீற்றர் போல்

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக, நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், வழக்கு விசாரணைகளையும் முன்னெடுத்தார்.

மலையகத்தை சேர்ந்த நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சட்டத்தரணியாக 7 வருடங்கள் சேவையாற்றிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால்மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இறுதியாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் கடமை புரிந்த பின்னர் தற்போது யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பெடுத்தார்.

கடமைகளை பொறுப்பேற்ற நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் கருத்து வெளியிடுகையில், யாழ் மண்ணில் தமிழ் மொழியில் சேவையாற்ற கிடைத்ததில் பெருமைப்படுகிறேன், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com