Tuesday, January 1, 2019

சதித்திட்டம் நடந்த 56 நாட்களின் பாதிப்பை மதிப்பீடு செய்ய முடியாது - நீதி அமைச்சர் தெரிவிப்பு

அரசியல் சதித்திட்டம் நிகழ்ந்த 56 நாட்களில் நாடு முகம் கொடுத்த பாதிப்பை மதிப்பீடு செய்ய முடியாதென்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரங்களை தொடர்ந்து பேணும் நோக்கத்தோடு தீர்மானங்கள் எதையும் ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் மேற்கொள்ளாது. அதேநேரம் மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்தும் பாடுபடுவோம்.

அதிகாரங்களை கைப்பற்ற முடியாமல் போனவர்கள்நாட்டில் இனவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். எதிர்வரும் தேர்தல் காலங்களிலும் இவர்கள் சிங்களம், தமிழ், முஸ்லீம் என்றே செயற்படுவார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் எமக்கு கிடைக்காவிட்டாலும் நாம் இனவாத செயற்பாட்டில் ஈடுபடவோ அதற்கு துணைபோகவோ மாட்டோமென்று இரத்தினபுரியில் நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com