Friday, January 25, 2019

அர்ஜுன் அலோசியஸ், மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு.

பெர்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்டவர்கள், மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன, நுவன் சல்காது மற்றும் சசித் தேவதந்திரி ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

11 மாதங்களின் பின்னர் கடந்த முதலாம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் முன்னலைப்படுத்தப்பட்ட போது, இவர்களுக்கு
பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர்களை தற்போது மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com