5000 ஏற்றுமதி கிராமங்களை அமைக்க நடவடிக்கை - தயா கமகே.
ஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை அமைக்க தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் தயா கமகே இதனை கூறியுள்ளார்.
நாட்டு மக்களின் நலன் கருதி இந்த அரசாங்கம், பல்வேறு சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் எதிர்காலத்திற்கு சிறந்த பயனைத் தரும் என அவர் கூறியுள்ளார்.
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் சேவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தெளிவூட்டும் முகமாக இந்த மாநாடு இடம்பெற்றது.
0 comments :
Post a Comment