கொழும்பின் புறநகர் பகுதிகளில், நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் - நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை.
கொழும்பின் புறநகர் பிரதேசங்களில், நாளைய தினம், 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளைக் காலை 08.00 மணிமுதல், நாளை மறுதினம் காலை 08.00 மணி வரை, இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமகம, மீப்பே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே, நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தகுந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment