Saturday, January 12, 2019

வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை, உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபரின் உடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சுற்றுலா முகாம் கடந்த 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 70 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com