Saturday, January 12, 2019

வடக்கு போன்று ஊவா மாகாண மாணவர்களுக்கும் அடிச்சது அதிஷ்டம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடமாகாணத்தை போன்று ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14 ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விடுமுறை தினத்திற்கான பாடசாலை நடவடிக்கையை மற்றொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ஆகவே, வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com