கடன் பெறுவதற்கு அமைச்சர் மங்கள சமரவீர வொஷிங்டன் பயணம்
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீளவும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில், வொஷிங்டன் பயணமாகியுள்ளார்.
நிதி அமைச்சரின் பயணத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த விஜயத்தில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment