Saturday, January 12, 2019

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்று, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டார். யானை கலவரப்பட வேண்டிய தேவை இல்லை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உரிய நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்போம் என்று நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

இவர்களை தொடர்ந்து, அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சற்று கிண்டலான கருத்தைப்பதிவு செய்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக ஆடைகளைத் தைத்து தயாராகின்றார். அந்த ஆடை அவருக்கு தேவையற்றது. அதேபோன்று ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தைத்து வைத்துள்ளார். சம்பிக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் புதிய ஆடைகள் இரண்டினைத் தைக்கின்றனர். ஆக, ஐக்கிய தேசியக் கட்சியினர் இதுவரையில் நான்கு ஜனாதிபதி ஆடைகளைத் தைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com