Saturday, January 5, 2019

முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் காரசாரமான பதில் வழங்கினார் மஹிந்த ராஜபக்ஸ

ஜனாதிபதி அபேட்சகர் பதவியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தாம் வழங்கப்போவதில்லை என்று
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் பொருட்டே அவர் இவ்வாறு கூறினார். மேலும் சந்திரிக்காவின் பின்னால் செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் யாரும் இல்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஒரு சிலரை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மைய நாட்களில் கூறப்படும் தகவல்கள் தொடர்பில் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com