போதைப்பொருள் கடத்தல்காரரை தப்பி செல்ல உதவி சந்தேக நபர் கைது
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த என்பவரை சிறைச்சாலைக்குள் இருந்து தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்த நபர், லுணுகம்வெஹர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறினார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சிப்பாய் ஒருவர், சிறைச்சாலைக் கட்டுப்பாட்டாளர் என்ற போர்வையில் சிறைச்சாலைக்கு சென்று, சுனில் சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் தப்பிச்செல்வதற்கு உதவி புரிந்திருந்தார். இந்த நிலையில் குறித்த 32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் லுனுகம்வெஹெர பிரதேசத்தில் வைத்து கைதாகியுள்ளார்.
சுனில் சாந்த என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர், வழக்கு ஒன்றிற்காக களுத்துறை சிறையில் இருந்து கேகாலை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு களுத்துறை சிறைச்சாலை பேரூந்திற்கு மாற்றப்பட்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் போன்று வேடமிட்டு வந்தவர்களால் சுனில் சாந்த தப்பிச் சென்றார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் திகதி தப்பிச்சென்றிருந்தார்.
பின்னர் அவர் கண்டி மீமுரே பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்துவந்த நிலையில்,கடந்த டிசம்பர் மாதம் 11 ம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment