Tuesday, January 29, 2019

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான ஆடைகள் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வீர்!

அண்மையில், கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பிரத்தியேக ஆடை பரிந்துரைக்கப்பட்டது. குறித்த ஆடைகள் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடும் அதிபர்கள் இருந்தால் கல்வி அமைச்சுக்கு அறிவுக்கும்படி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வருடம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கர்ப்பிணி ஆசிரியர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, குறித்த கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு இலகுவான மற்றும் பொருத்தமான ஆடையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி 2018/21 சுற்றறிக்கையினூடாக கல்வி அதிகாரிகளுக்கு தௌிவூட்டப்பட்டது. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிரத்தியேக ஆடைகளுடன் கர்ப்பிணி ஆசிரியைகள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள சில அதிபர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த தகவல் கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க விரும்புவோர் கல்வி அமைச்சின் 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்யமுடியும் எனவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com