Monday, January 28, 2019

யாழ்பாணத்தில் கற்பழிப்புக்களும் கறுப்புச் சட்டைகளும். பீமன்.

யாழ் மாவட்டத்தில் கொள்ளையர்கள் மற்றும் காமுகர்களின் கைவரிசை அதிகரித்துள்ளமை யாவரும் அறிந்தது. பகற்கொள்ளைகள் இடம்பெறுகின்றது. கொள்ளையர்கள் தமக்கு தேவையான விதத்தில் கொள்ளைகளை மேற்கொண்டுவிட்டு கணவன் முன் மனைவியை கற்பழித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனம்தெரியாத நபர்களால் 'சுட்டுக்கொலை' என்ற பாங்கிலேயே இவ்விடயங்களை இன்று எவரும் கண்டு கொள்வதில்லை.

முன்னொரு காலத்தில் புலிகள் பட்டப்பகலில் நபர்களை சுட்டுக்கொன்றுவிட்டு செல்கின்றபோது, சுட்டுச்சென்றவனின் பரம்பரை தொடர்பான விபரம்கூட மக்களுக்கு தெரிந்திருந்தது, ஆனாலும் ஊடகங்கள் 'இனம் தெரியாத நபர்களால் வயோதிபர் சுட்டுக்கொலை' என முந்தியடித்து செய்திகளை வெளியிட்டு நீதிக்கு தடையாக நின்றனர். கொலையாளியின் பக்கத்துவீட்டுக்காரனும், நமிட்டு சிரிப்புடன் இனம்தெரியாத நபர் என்பதை ஏற்றுக்கொள்வார். அவ்வாறு ஏற்றுக்கொள்வதன் ஊடாக அவர்கள் சமூகத்தின் தியாகிகளாக கணிக்கப்படுவார்கள்.

அநியாயம் புரிந்தவனை எவராவது காட்டிக்கொடுத்தால் அவர்கள் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். ஏன் துரோகிகள், ஏன் காட்டிக்கொடுத்தார்கள், யாரை காட்டிக்கொடுத்தார்கள், எதற்காக காட்டிக்கொடுத்தார்கள், காட்டிக்கொடுத்தது சரியா என்ற கேள்வியெல்லாம் எழுப்பப்படாது. காட்டிக்கொடுத்தால் துரோகிகள். இவ்வாறுதான் கொலைகளுக்கு அன்று பச்சைக் கொடி காட்டப்பட்டது. இன்று கொள்ளைகளுக்கும் கற்பழிப்புக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் இவ்வாறே பச்சைக்கொடி காட்டப்படுகின்றது.

யாழ்பாணத்தில் நன்கு அறியப்பட்ட கொள்ளையர்களை, காமூகர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, தெருச்சண்டியர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டனை பெற்றுக்கொடுப்பதில் பொலிஸார் இரு பெரிய சவால்களை எதிர்கொள்ளுகின்றனர். ஒன்று தகவல்கள் பொதுமக்களிடமிருந்து கிடைப்பதில்லை. இரண்டாவது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கென்று ஒரு கறுப்புச் சட்டை கூட்டமே இருக்கின்றது.

அண்மையில் இளவாலைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு கொள்ளைக்குச் சென்ற இருவர் வீட்டிலிருந்த பணம் நகைகளை அரிதட்டினால் அரித்தெடுத்துவிட்டு, தாயை அறையொன்றில் பூட்டிவைத்துவிட்டு 17 வயது மகளை தங்களுக்கு வேண்டியவாறு இருவரும் வன்புனர்வு கொண்டுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யுவதியை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மிரண்டு நின்றனர். சாதாரண மனிதர்களால் இவ்வாறு நடந்து கொள்ள முடியாது என்று முழிகளைப் பிதுக்கும் அளவுக்கு அகோரம் இடம்பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொள்ளையர்களுக்கான வேவுக்காரன் தனது வேவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடைப்படையில் பொலிஸாரினால் மடக்கிப்பிடிபட்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, தெல்லிப்பளையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (28 வயது) மற்றும் ஏழாலையைச் சேர்ந்த இராஜகோபல் கிருஷ்ணகுமார் (30 வயது) என்ற இரு காமுகர்களே மேற்படி செயலை மேற்கொண்டனர் என்ற விடயம் அம்பலமாகியதுடன் மேலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

ரூபன் மற்றும் கிருஷ்ணகுமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, இவர்களை இயக்கும் பிரதான நபர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. அத்துடன் அந்த நபர் குறிப்பிட்ட நேரத்தில் கிளிநொச்சி பிரதேசத்திற்கு சென்றுள்ள காரணத்தினால் கொள்ளையடிக்கப்பட்ட நகை பணம் என்பன கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவிடம் வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

கோள்ளைகோஷ்டி தலைவனின் மனைவியிடம் பொலிஸார் நகைக்களை மீட்க சென்றபோது, தனது வீட்டில் சீசீரிவி கமராவில் பொலிஸார் உள்நுழைவதை அவதானித்துக்கொண்டிருந்த கொள்ளைக்கோஷ்டி தலைவி பொலிஸாரை உட்கார வைத்து சட்டப்புத்தகங்கள் சிலவற்றை தூக்கி மேசையில் போட்டு கைது செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை முதலில் படிக்குமாறு வேண்டியுள்ளார்.

17 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு கொள்ளையடித்து வரும் நகைகளை உங்கள் வீட்டில் வைத்திருக்க உங்களுக்குள்ள உரிமையாது என்று பொலிஸார் கேட்டபோது, அதை பற்றி உங்களிடம் எனது சட்டத்தரணி சர்மி பேசுவார் என்று பதிலளித்துள்ளார் கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவி.

எது எவ்வாறாயினும் வீட்டை சோதனையிட்டு நகைகளை மீட்ட பொலிஸார் அவளை கைதுசெய்து பொலிசுக்கு கொண்டு சென்றபோது பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிய சர்மி அவளை பிணையில் எடுத்துச் சென்றுள்ளாள். அத்துடன் பிணையில் செல்லும்போது சிறைக்கூடுகளுக்கு அருகாமையில் சென்ற கொள்ளைக்கோஷ்டி தலைவனின் மனைவி கொள்ளையர்களுக்கு 'நீங்கள் பயமில்லாமல் இருங்கள் சர்மி உங்களை வெளியே கொண்டுவருவா' என்று சொல்லிச் சென்றதாக அறியமுடிகின்றது.

யாழ்பாணத்தில் இடம்பெறும் மேற்படி கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களின் பின்னணியில் கறுப்பு சட்டை போட்ட கயவர்களே உள்ளனர் என்பது பரவலாக பேசப்படுகின்றது. இவ்வாறானவர்கள் கைது செய்யப்படுகின்றபோது, அதே நிமிடத்தில் ஆஜராகும் கறுப்புச் சட்டை காரர்கள் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாணியில் விசாரணைகளை மேற்கொள்ள தடையாக நிற்கின்றனர் என்பதுடன் கொள்ளையர்களுக்கு உத்வேகத்தையும் கொடுக்கின்றனர்.

இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் மற்றும் சமூக விரோதிகள் தொடர்பான 90 வீதமான வழக்குகள் யாழ்பாணத்தில் சிறிகாந்தாவினால் கையாளப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியற்காவலர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ் இயக்கம் ஒன்றின் முதல்வர்தான் இந்த சிறிகாந்தா.

சட்டத்தை காக்கவேண்டியர்கள் இவ்வாறு சமூகவிரோதிகளை சட்டத்திலுள்ள ஓட்டைகளினூடாக வெளியே கொண்டுவர கங்கணம்கட்டி நிற்கின்றபோது சமூகவிரோத செயற்பாடுகள் என்றுமே ஒழியப்போவதில்லை.

மேற்படி யுவதியை கற்பழித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில கைது செய்யப்பட்டுள்ள காமுகர்களின் படங்கள் இதோ, இதை பகிர்ந்து இவர்களது சகாக்களை இனம்காண உதவுங்கள். அல்லது களவு கொடுத்த மக்கள் இப்படத்தினை கண்டால் தங்களுடைய வீடுகளில் கொள்ளையடித்தது இவர்கள்தான் என்று அடையாளம் கண்டால் பொலிஸ் நிலையத்தில் முறையிடமுடியும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com