நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் குளிரான காலநிலையே தொடர்ந்தும் நிலவி வருகின்ற நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment