வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று இல்லை - மிலிந்த ராஜபக்ச மறுப்பு
கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று அமைக்கப்படுவதாக வெளியாகிய செய்தியில் எந்ததொரு உண்மையும் இல்லையென அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு, காரியாலயம் அமைக்க எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் காரியாலயம் அமைப்பது தொடர்பில் வேறு எவருக்கும் பொறுப்புக்களை கையளிக்கவில்லை எனவும் மிலிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷவின் பெயரில் வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் காரியாலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிலர் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment