ஆரம்பமானது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமாகி உள்ள சர்வதேச வர்த்தக பிராமண கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக 10வது தடவையாகவும் கண்காட்சி ஏற்பாடாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்த வருட கண்காட்சியிலும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment