தமது கடமைகளை சரிவர செய்ய இடையூறு விளைவிக்கப்படுவதாக கூறி, வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள், நேற்றைய தினம் மாலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது கடைமைகளை சரிவரச் செய்வதற்கு இடையூறு விளைவிப்பதை நிறுத்துமாறு கோரியே, குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரசபைக்கு முன்பாக இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது நகரசபை உத்தியோகத்தர்கள், “எங்கள் கடமைகளை சரியாக செய்ய அனுமதிக்கவும், நகரசபைத் தலைவரை அவமதிக்காதே, அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு அச்சுறுத்தாதீர்கள் போன்ற பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பதாகைகளை அகற்றும் பணிகள் நகரசபைத் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அக்கட்சியின் நகரசபை உறுப்பினர்கள் உள்ளடங்கியவர்களால் இப்பதாதைகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அநாகரிமான முறையிலும் நடந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதனை எதிர்த்து இன்று இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணதாஸ மற்றும் நகரசபை உறுப்பினர் ஜானக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது, நகரசபைத் தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்களுடன் சந்திப்பை மேற்கொண்டதுடன், குறித்த செயற்பாட்டிற்கு தமது மன்னிப்பையும் தெரிவித்தனர். இதன்பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
0 comments :
Post a Comment