இறக்கும் போது கூட சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இறப்பேனே தவிர, ஐ.தே.க வுக்கு சோரம் போக மாட்டேன் - குமார வெல்கம.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டுமாயின், கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியமென மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று மாயை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
பொதுத் தேர்தலுக்குச் செல்ல ஆயத்தமாகி நாம் தோல்வியடைந்துள்ளோம். எனவே, மீண்டும் ஒரு முறை எதற்காக தோல்விக்கு முகம் கொடுக்க வேண்டும்?
பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது. ஆனால், இந்தப் பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவே முடியாது.
மேலும், தற்போதைய நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைமைத்துவத்திற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சியை பாதுகாத்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கட்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அனைவரைவிடவும் கட்சிக்காக செயற்பட்டார். ஆனால், தற்போதுள்ள தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் பெரிதாக சிந்திப்பதில்லை. இதனாலேயே நாம் எமது கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியமென, நாம் வலியுறுத்துகிறோம்.
புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி செயற்படுமாக இருந்தால், நிச்சயமாக வெற்றிப் பாதையில் எம்மால் பயணிக்க முடியும்.
இவ்வாறான உண்மையை வெளிப்படையாகப் பேசும் போது, நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சோரம் போய்விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள்.
இது குறித்து நான் என்றும் கவலையடைந்தது கிடையாது. நான் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டேன். இறக்கும் போதுகூட சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இறப்பேன்’ என்றார்.
0 comments :
Post a Comment