Saturday, January 26, 2019

யுத்தம் அரங்கேறி, ஒரு தசாப்தம் கடந்தும், இன்னும் நீதியில் தாமதம் - சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி.

யுத்தம் அரங்கேறி, ஒரு தசாப்தம் கடந்தும், இன்னும் நீதியில் தாமதம் நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை, குற்றம் சுமத்தியுள்ளது.

தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடு செய்தல் உள்ளிட்ட பொறுப்புக் கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் நிறைவடைகின்றது என மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து இவ்வருடத்தின் மே மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம், உண்மைக்காகவும், நீதிக்காகவும் காத்திருப்பது? என்ற கேள்வி எழுவதாகவும், சர்வதேச மன்னிப்புச்சபை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை அரசாணைகள் கூடுதல் கவனம் செலுத்த்தி, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை நிவர்த்திக்க வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com