சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை - மனோ கணேசன்.
சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என, அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டங்களை, தேசிய தின கொண்டாட்டமாக அறிவிக்கவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கடந்த தினம் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் கருத்து தொடர்பில் அரச கருமை மொழிகள் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோ கணேசனிடம், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் சுதந்திர தினம் என்பதை மாற்றுவதற்கான எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பின் எட்டாம் சரத்தில் சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக, அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் விஜிர அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் இனிவரும் காலங்களில் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, தேசிய தினமாக கொண்டாடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது, தேசிய தினமே அன்றி சுதந்திர தினமல்ல என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்த்தன கூறியிருந்தார்.
எனினும் சுதந்திர தினத்தை, தேசிக்காய் தினமாக கொண்டாட வேண்டிய அவசியம் எதுவும் இல்ல என, அரச கருமை மொழிகள் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment