ஜனநாயக தேசிய முன்னணி இரண்டே வாரங்களுக்குள் அமைக்கப்படும் - பிரதமர்.
ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டே வாரங்களுக்குள் அமைக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெமட்டகொடையில் இடம்பெற்ற சியபத் செவன வீடமைப்பு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகங்கள் மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றை கட்டியெழுப்புவதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டை கட்டியெழுப்புவதே இந்த அரசியல் கூட்டணியின் நோக்கமாகும் என்றும் அறைகூவல் விடுத்தார்.
0 comments :
Post a Comment