Wednesday, January 23, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் நோக்கி பயணம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல், சிங்கப்பூர் நோக்கி பயணமானதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. சிங்கப்போரில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்கும் நோக்கிலேயே ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்த நாடுகளின் சுற்றாடல்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலர் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துவதற்காகவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com