Wednesday, January 23, 2019

கிழக்கில், வாரம் ஒருமுறை 18 தமிழர்கள் இனமாற்றப்படுகின்றனர் - வியாழேந்திரன்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களில் 18 பே,ர் வாரந்தோறும் இன மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த தினம் தமிழ் தேசியக் கூட்மைப்பிலிருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, இந்த விடயத்தைக் கூறினார்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நடவடிக்கைகளை தடுக்காது, தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூடட்மைப்பினர், இப்போது அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நல்லிணக்கம் பேசிக் கொண்டு காலத்தை கடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள், ஏனைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகளை தடுக்காது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வருகின்ற போதிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் வியாளேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது இவ்வாறான மதமாற்றத்தை தடுக்க முடிந்தா என்றும் அவ்வாறு செய்யவில்லையாயின் அதற்கான காணரம் யாது என்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது.

அத்துடன் மதச் சுதந்திரம் உள்ள ஒருநாட்டில் ஒருவர் விரும்பி மதம் மாறுகின்றபோது அதை எவ்வாறு தடுக்க முடியும் என்ற கேள்வியும் இங்கே முன்வைக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com