Monday, January 14, 2019

பிரதமரை வீட்டுக்கு அனுப்புவதே, எமது பிரதான இலக்கு - வாசுதேவ நாணயக்கார சூளுரை.

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் இருந்து வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதே, தமது பிரதான நோக்கம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் .

அதற்கான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, வாசுதேவ நாணயக்கார இதனை கூறினார்.

தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ தயாராக உள்ளத்தாக்காக கூறிய அவர், எதிர்வரும் தேர்தலில் ரணிலை தோற்கடிப்பது உறுதி என கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கொண்டு, அடுத்த தேர்தலில் தாம் களமிறங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com