Monday, January 14, 2019

தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பு குறித்து, பொறுப்பு கூற வேண்டிய தேவையில்லை - தயாசிறி ஜயசேகர.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில், தனிப்பிட்டவர்களின் கருத்துக்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பொறுப்புக் கூறமுடியாது என, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கனவு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என அனைத்து கட்சிகளை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் காணப்படுகின்றது.

எனினும் இதனைக் காரணமாக வைத்து அனைவரையும் வேட்பாளராக்க முடியாது. கட்சி ரீதியாக கலந்து ஆலோசித்த பின்னர், இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என அவர் கூறினார்.

அடுத்து வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் நலனுக்காக தமது கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பின் அங்கத்தவர் அமோக வெற்றி பெறுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com