Monday, January 14, 2019

ஜனாதிபதி கொலை சூழ்ச்சி தொடர்பில் காவல் துறைமா அதிபருக்கும் தொடர்புள்ளதா?

குரல் பதிவு ஒன்றை வழங்குவதற்காக காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று அரச பகுவாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்காக இடம்பெற்ற சூழ்ச்சி தொடர்பான குரல் பதிவுகளை பரிசீலிப்பதற்கு இன்று காவல்துறை மா அதிபரின் குரல் மாதிரி பெறப்பட்டது.

இன்று காலை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த காவல்துறைமா அதிபர் சுமார் 45 நிமிடங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். குரல் பதிவொன்றை வழங்குவதற்கு காவல்துறைமா அதிபர் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதனிடையே குரல் பதிவை வழங்கிய பின்னர் குறித்த திணைக்களத்தை விட்டு வெளியேறிய அவரிடம் ஊடகவியலார்கள் கேள்விகளாய் எழுப்பி இருந்த போதும் அதற்கு அவர் எவ்வித பதிலும் வழங்கவில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com