Monday, January 14, 2019

பௌத்தர்களின் புனித நூலான திரீபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி

பௌத்தர்களால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகமானது கடந்த 5ம் திகதி தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம் பெற்றது. இதனையடுத்து உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 5ம் திகதி இடம் பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி அவர்கள் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் பிரேரணை அமைச்சரவை முன்னிலையில் முவைக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன் படி இன்றைய தினம் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதோடு எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது இப் பிரேரணை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவது தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் ஜனாதிபதி செயலாளர் உதய.ஆர்.செனவரத்ன தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com